ஆன்லைனில் ஜல்லிக்கட்டு போட்டியை பதிவு செய்வதை கைவிட வலியுறுத்தி நூதன போராட்டம்.!

  • ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவு.
  • இதனால் காளை வளர்ப்போர் ஆன்லைன் ஜல்லிக்கட்டு முறையை கைவிட வலியுறுத்தி  திருச்சியில் நூதன போராட்டம் நடத்தினர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், ஒரு காளை அதிகபட்சமாக ஒன்று மற்றும் இரண்டு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும். மேலும், காளை வளர்ப்போர் விருப்பப்படும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்படும்.

இதனால், ஆன்லைன் ஜல்லிக்கட்டு போட்டியை பதிவு செய்வதை கைவிட வலியுறுத்தி காளை வளர்ப்போர், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருச்சியில் திருவானைக்காவல் மேல கொண்டயம்பேட்டையை சேர்ந்த காளை வளர்ப்போர், தங்களது பத்துக்கும் மேற்பட்ட காளைகளை, ஜல்லிக்கட்டுக்கு அழைத்துச் செல்வதுபோல அலங்கரித்து தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் சென்று நூதன போராட்டம் நடத்தினர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்