இனி வாரம் ஒருமுறை ராஜதானி விரைவு ரயில்!

Default Image

மத்திய அமைச்சர்கள் மனோஜ் சின்கா, தர்மேந்திர பிரதான் ஆகியோர் புவனேஸ்வரம் – டெல்லி இடையே செல்லும் புதிய ராஜதானி விரைவு ரயிலை  தொடங்கி வைத்தனர். ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரத்தில் இருந்து சம்பல்பூர், ரூர்கேலா வழியாக டெல்லிக்கு வாரம் ஒரு முறை செல்லும் ராஜதானி விரைவு ரயில் இயக்கப்படும் எனக் கடந்த ஆண்டு ரயில்வே அமைச்சர் அறிவித்தார்.

அதன்படி புவனேஸ்வரத்தில் இருந்து இன்று காலை டெல்லிக்கு ராஜதானி விரைவு ரயில் இயக்கப்பட்டது. ரயில்வே துறை இணையமைச்சர் மனோஜ் சின்கா, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் டெல்லியில் ரயில்வே வாரியத்தில் இருந்து காணொலிக் காட்சி முறையில் கொடியசைத்துப் புதிய ரயில் போக்குவரத்தைத் தொடக்கி வைத்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்