மது குடிக்க பணமில்லை! திருடிய பைக்குகளை 1000, 2000 ரூபாய்க்கு விற்றுவந்த ‘போதை’ ஆசாமி!

- சென்னையில் சந்தைப்பேட்டை, கிண்டி பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர் திருட்டில் போதை ஆசாமி ஈடுபட்டு வந்துள்ளார்.
- மது குடிப்பதற்காக வாகனத்தை திருடி 1000, 2000 ரூபாய்க்கு விற்று வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
சென்னையில் உள்ள கிண்டி, மேற்கு மாம்பழம் ஆகிய பகுதிகளில் வீடுகளுக்கு வெளியில் நிற்க வைத்திருந்த இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடு போய் இருந்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் செய்து வந்துள்ளன. இது தொடர்கதையாகவே போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதற்காக 50க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து புருசோத்தமன் என்பவரை கைது செய்தனர். அவர் சைதாப்பேட்டையில் ரயில் நிலையம்அருகே வசித்து வந்துள்ளார். இவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். ஆனால், குடிப்பழக்கம் அதிகமானதால் கடந்த ஒரு வருடமாக வேலைக்கு செல்வதில்லை. மாறாக, அவ்வப்போது இருசக்கர வாகனத்தை திருடி, அதனை மதுபான கடையில் இருக்கும் யாருக்கேனும் 1000, 2000 ரூபாய்க்கு விற்பனை செய்துவிடுகிறார்.
இந்த தகவல்கள் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அவர் திருடிய 14 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தற்போது அந்த போதை ஆசாமி சிறையில் உள்ளார்.