தகுதி சுற்று போட்டி: மேரிகோம்-நிகாத் ஜரீன் மோதல்.! இந்திய அணியில் இடம்பெற போவது யார்..?

Default Image
  • வருகின்ற பிப்ரவரி மாதம் சீனாவில் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி நடைபெற உள்ளது.
  • அதற்காக இந்திய பெண்கள் குத்துச் சண்டை அணியில் 5 எடைப்பிரிவுகளில் யார் யாரை தேர்வு செய்ய  வேண்டும் என டெல்லியில் 2 நாள் தகுதி போட்டி நடைபெறுகிறது.

வருகின்ற பிப்ரவரி மாதம் சீனாவில் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி நடைபெற உள்ளது. இந்த தகுதி சுற்று போட்டிக்காக இந்திய பெண்கள் குத்துச் சண்டை அணியில் 5 எடைப்பிரிவுகளில் யார் யாரை தேர்வு செய்வது என்பதற்காக டெல்லியில் 2 நாள் தகுதி போட்டி நடைபெறுகிறது.

இந்த  2 நாள் தகுதி போட்டி நேற்று தொடங்கியது. இதில் 51 கிலோ உடல் எடைப் பிரிவில் நடைபெற்ற ஒரு போட்டியில் ஜூனியர் உலக சாம்பியனான  நிகாத் ஜரீன், தேசிய சாம்பியன் ஜோதி குலியாவை வீழ்த்தி நடுவர்களின் ஒருமித்த முடிவின்படி நிகாத் ஜரீன் வெற்றி பெற்றார்.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற  மேரிகோம் , ரிது கிரிவாலை வீழ்த்தினார். தகுதி சுற்றின் இறுதி ரவுண்டில் 36 வயதான மேரிகோம், 23 வயதான நிகாத் ஜரீன்  இருவரும் இன்று மோத உள்ளனர்.இன்று வெற்றி பெறும் வீராங்கனை  இந்திய அணியில் இடம் பெறுவார்கள்.

மேரிகோமை நேரடியாக தகுதி சுற்றுக்கு தேர்வு செய்யக்கூடாது அவரை என்னுடன் மோத வைக்க வேண்டும் எனபல முறை நிகாத் ஜரீன் அடிக்கடி வலியுறுத்தி வந்த நிலையில் இன்று இருவரும் மோத உள்ளனர்.

இது குறித்து நிகாத் ஜரீன் கூறுகையில், “மேரிகோமை எதிர்த்து மோத வேண்டும் என்ற நீண்ட கால விருப்பம் இன்று  நிறைவேற போகிறது. எனது முழு  திறமையை வெளிப்படுத்தி இந்த போட்டியை  மறக்க முடியாத போட்டியாக மாற்ற முயற்சிப்பேன்” என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்