அதிமுகவுக்கு மக்களின் ஆதரவு சிறப்பாக உள்ளது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Default Image
  • உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு மக்களின் ஆதரவு சிறப்பாக உள்ளது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
  • மேலும்  குடியுரிமை திருத்த சட்டத்தை வைத்து திமுக அரசியல் செய்கிறது என்றும் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு மக்களின் ஆதரவு சிறப்பாக உள்ளது. 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் அதிமுக அரசு கொடுத்துள்ளது.மக்களுக்கு தேவையான திட்டங்களை அரசு உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது.

குடியுரிமை திருத்த சட்டத்தை வைத்து திமுக அரசியல் செய்கிறது.குடியுரிமை சட்டத்தால் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினருக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. இஸ்லாமியர்களுக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும், அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்