#TamilCinema2019 : இந்த வருட ஆரம்பதிலேயே சூப்பர் ஸ்டாரும் தல அஜித்தும் ரசிகர்களுக்கு கொடுத்த திரை விருந்து!

  • இந்த வருட தொடக்கத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு பேட்ட படமும் விஸ்வாசம் திரைப்படமமும் வெளியானது. 
  • இந்த இரு படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மெகா ஹிட்டானது. 

இந்த வருட தொடக்க முதலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு திரை விருந்து காத்திருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பேட்ட படமும், தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படமும் ஒரே நாளில் பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு வெளியாகி இருந்தது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதியன்று, வெளியான இப்படங்களில் பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமும், விஸ்வாசம் படத்தை சத்ய் ஜோதி பிலிம்ஸூம் தயாரித்திருந்தது. விவேகம் தோல்விக்கு பின்னர் வரும் அஜித் படம் என்பதாலும், ரஜினியை மாஸ் படத்தில் பார்த்து வெகுநாட்களாகி இருந்த ரசிகர்களுக்கு விருந்தாகரஜினியின் மாஸ் படமாகும் இரு படங்களும் அவர்களது ரசிகர்களுக்கு திரை விருந்து படைத்தன.

இரு படங்களும் பெரிய வெற்றியை பதிவு செய்தன. உலக அளவில் மொத்த வசூலில் பேட்ட முதலிடத்திலும், அஜித்தின் விஸ்வாசம் தமிழ்நாட்டில் அதிக வசூலையும் பெற்றதாக கூறப்பட்டது. குடும்ப திரைப்படமாக உருவான அஜித்தின் விஸ்வாசம் திரையரங்குகளில் நீண்ட நாட்கள் ஓடியது.

விஸ்வாசம் மாற்று திறனாளிகளுக்காக ஸ்பெஷலாக திரையிடப்பட்டது. இந்த ஸ்பெஷல் ஷோவில் இயக்குனர் சிறுத்தை சிவா, நடிகை ரேவதி ஆகியோர் கலந்துகொண்டனர்.