மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை!ஒலிபெருக்கியைப் பயன்படுத்த தடை….

Default Image

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கூம்பு வடிவ ஒலிபெருக்கியைப் பயன்படுத்தத் தடை விதித்தும், விதியை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர்  ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தன் வீட்டின் அருகில் உள்ள தேவாலயத்தில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவதாகவும், இதனால் ஏற்படும் ஒலிமாசால் பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

கூம்புவடிவ ஒலிபெருக்கியைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கூம்பு வடிவ ஒலிபெருக்கியைப் பயன்படுத்தத் தடை விதித்தும், தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்