பாக். இந்துவுக்கு ஒரு நியாயம்? இலங்கை இந்துவுக்கு ஒரு நியாயமா ?- கமல் ஹாசன் கேள்வி

Default Image
  • சமீபத்தில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.  
  • மதத்தின் பெயரால் மக்களின் உயிரை பறிப்பது அரசின் சூழ்ச்சி என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர முடிவு செய்தது.இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்டது.குடியரசு தலைவர்  இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்த நிலையில் மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.நேற்று டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு ஏற்பட்டது .பின்னர் போலீசார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.இதனை கண்டித்தும் பல இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,மதத்தின் பெயரால் மக்களின் உயிரை பறிப்பது அரசின் சூழ்ச்சி.மக்களுக்கு எதிராக நடத்தப்படும் சூழ்ச்சியை முடிவுக்கு கொண்டு வரும் வரை நான் ஓய மாட்டேன்.சமூகத்தை பொறுத்தவரை நானும் ஒரு மாணவன் தான். மாணவர்களுக்கு நடந்த அநீதிக்கு நானும் குரல் கொடுக்க வேண்டும்.

அதிகாரம் மக்களின் கையில் இருக்கும்வரைதான் அது ஜனநாயகம். பாகிஸ்தான் இந்துவுக்கு ஒரு நியாயம்? இலங்கை இந்துவுக்கு ஒரு நியாயமா ? என்றும் கேள்வி எழுப்பினார். மத்திய அரசுக்கு அதிமுக ஆதரவளித்தது தமிழினத்திற்கும் தேசத்திற்கும் செய்த துரோகம்.இது கட்சி , சாதியை எல்லாம் கடந்தது இந்த பிரச்சினை அதனால் எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்று தெரிவித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்