உள்ளாட்சித் தேர்தல் – உச்சநீதிமன்றத்தில் திமுக 2-வது வழக்கு

Default Image
  • தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு  வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. 
  • உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக  உச்சநீதிமன்றத்தில் மீண்டும்  திமுக  வழக்கு தொடர்ந்துள்ளது.

தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது . இதற்கு இடையில் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்,உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு முறையை சரியாக பின்பற்றவில்லை என்றும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது .இந்த வழக்கை  விசாரித்த உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு,   2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என தீர்ப்பளித்தது. இதன் பின்பு உள்ளாட்சித் தேர்தலுக்கு புதிய அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9 ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் நேற்றுடன் முடிவடைந்தது.இன்று வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறுகிறது.

நேற்று உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையருக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் திமுக அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், உச்சநீதிமன்ற உத்தரவுகளை மாநில தேர்தல் ஆணையம் முழுமையாக செயல்படுத்தவில்லை  என்றும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சித் தேர்தல் நடத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் இன்றும் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.அந்த வழக்கில்,உச்சநீதிமன்றம் கடந்த 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பிறப்பித்த உத்தரவை பின்பற்றவில்லை என்று மாநில தேர்தல் ஆணையர் மற்றும் தலைமை செயலாளருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்