சென்னையில் படித்தவர் தான் அடுத்த இந்திய இராணுவ தலைமை தளபதி..!!!

Default Image
  • இந்திய இராணுவ தலைமை தளபதியின் பதவிக்காலம் இந்த மாதத்தனுடன் நிறைவு.
  • தேர்வு செய்யப்பட்டார் இந்திய இராணுவத்தின் புதிய தலைமை தளபதி.

உலக அளவில் மிகப்பெரிய இராணுவமாக திகழ்வது இந்திய இராணுவம் ஆகும்.இந்த, இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, தற்போது இராணுவ தளபதியாக உள்ள பிபின் ராவத், இந்த டிசம்பருடன் ஓய்வு பெறுகிறார். இவரைத் தொடர்ந்து மனோஜ் முகுந்த் தளபதியாக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ஏற்கனவே, கடந்த செப்டம்பர் 1-ந் தேதி ராணுவ துணை தளபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மனோஜ் முகுந்த்  நரவனே,,மகாராஷ்டிராவின் புனேவின் பள்ளி படிப்பை  முடித்தார். மேலும் இவர்,புனே தேசிய பாதுகாப்பு அகாடமி, டேராடூன் இந்திய ராணுவ அகாடமியிலும் சென்னை பல்கலைக் கழகத்தில் பாதுகாப்பு தொடர்பாக முதுகலை பட்டமும் படித்தவர்.இவர் முதன்முதலில், 1980-ம் ஆண்டு 7-வது சீக்கியர் படைப்பிரிவில் இணைந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்