உள்ளாட்சித் தேர்தல் : வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை

Default Image
  • தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
  • ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறும் தேர்தலுக்கான வேட்புமனு மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. 

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு டிசம்பர் 27-ஆம் தேதி மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது என்று  தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9 ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் டிசம்பர் 16 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்தது.

இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு ,அவர்கள் வேட்புமனுக்களையும் தாக்கல் செய்தனர்.நேற்று கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்,மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்  ஆகிய பதவிகளுக்கான மனுதாக்கல் நிறைவுபெற்றது .டிசம்பர் 19 ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் ஆகும் .வாக்கு எண்ணிக்கை 2020 -ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறுகிறது.இந்நிலையில் இன்று தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்