மது போதையில் பக்கத்து வீட்டுக்காரரை தாக்கிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்.!

Default Image
  • முன்னாள் கிரிக்கெட் வீரர் மது போதையில் தாக்கியதாக பக்கத்து வீட்டுக்காரர் புகார்.
  • 7 வயது மகனை கீழே தள்ளிவிட்டு காயம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரவீன்குமார், தன்னை மது போதையில் தாக்கியதாக அவரது பக்கத்து வீட்டுக்காரர் போலீசில் புகாரளித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த தீபக் சர்மா என்பவர், தனது மகனுடன் பேருந்துக்காக காத்திருந்தபோது அங்கு காரில் வந்திறங்கிய பிரவீன்குமார், மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. திடீரென தீபக் சர்மாவுடன் போதையில் தகராறு செய்த பிரவீன்குமார், தீபக் சர்மாவை தாக்கியதுடன் அவரது 7 வயது மகனை கீழே தள்ளிவிட்டு காயம் ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறத.

இது தொடர்பாக காவல்துறைக்கு வந்த புகாரையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன் 2008-ம் ஆண்டும் மருத்துவர் ஒருவரை மது போதையில் தாக்கியதாக பிரவீன்குமார் மீது புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்