பரணி மாதிரி ஜீலியும் எஸ்கேப் ஆகட்டும்… சினேகனின் சதி யோசனை
சென்னை : பரணி மாதிரி ஜீலியும் பிக்பாஸ் வீட்டை விட்டு எஸ்கேப் ஆகட்டும் என்று கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார். காரணம் ஓவியாவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதால்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினமும் ஓவியாவுக்கு தான் முக்கியத்துவம் தரப்படுகிறது, மற்றவர்கள் புறக்கணிக்க படுகிறார்கள் எனவும், அதை மாற்ற கவிஞர் சினேகன் ஒரு யோசனை தெரிவித்துள்ளார். என்ன தெரியுங்களா.
காயத்ரியிடம் பேசிக்கொண்டிருந்த சினேகன் இது பற்றி கூறியிருப்பதாவது “ஓவியா செய்யும் பிரச்னைகள் போல தினமும் நாமும் ஏதாவது செய்வோம். இன்னைக்கு ரைசாவை நான் அடிக்குறேன், நாளைக்கு அவ என்னை அடிக்கட்டும், இன்னொரு நாள் நாம சேர்ந்து ஜூலியை தூக்கி போட்டு மிதிப்போம்.”
“ஜூலி பரணி மாதிரி சுவர் ஏறி வெளியே குதிக்கட்டும்.. அப்போ தான் நமக்கு முக்கியத்துவம் தருவாங்க” என்று தெரிவித்துள்ளார். இது ஓவியாவுக்கு எதிராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கங்கணம் கட்டுகின்றனர் என்பது மட்டும் தெளிவாக தெரிவதால் ஓவியா ரசிகர்கள் கொதித்து கொண்டு இருக்கின்றனர்.