ஓய்வுக்கு பின் மீண்டும் சர்வேதேச போட்டியில் பிராவோ ..!

Default Image
  • சமீபத்தில் பொல்லார்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அப்போது பிராவோ மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட வேண்டும் என கூறினார்.
  • தற்போது அணியில் பயிற்சியாளர், நிர்வாகம் மற்றும் கேப்டன் ஆகியவை மாறியுள்ளது. எனவே இந்த தருணத்தில் அணிக்கு திரும்புவது நல்லது என பிராவோ கூறினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் பிராவோ.வெஸ்ட் இண்டீஸ் அணியில்  கடந்த 2004-ம் ஆண்டு முதல் விளையாடி வந்த இவர் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சர்வேதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

பிராவோ வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 40 டெஸ்ட் போட்டி ,164 ஒருநாள் போட்டிகளும் ,66 டி 20 போட்டிகளும் விளையாடி உள்ளார்.பிராவோ கடைசியாக இண்டீஸ் அணிக்காக 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் விளையாடினார்.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் தற்போது அணியின் கேப்டன்கள் மற்றும் நிர்வாகிகள் என பலர் மாற்றப்பட்டு உள்ளனர்.தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின்  கேப்டனாக  பொல்லார்ட் நியமிக்கப்பட்டார்.அப்போது பிராவோ மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட வேண்டும் என கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு கருத்தை பிராவோ கூறியுள்ளார்.அதில் “நான் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டி 20 போட்டிகளில் களமிறங்க உள்ளேன். ஏன்னென்றால் தற்போது அணியில் பயிற்சியாளர், நிர்வாகம் மற்றும் கேப்டன் ஆகியவை மாறியுள்ளது. எனவே இந்த தருணத்தில் அணிக்கு திரும்புவது நல்லது.

நான் டி 20 உலக கோப்பையை மனதில் வைத்து மீண்டும் அணியில் இறங்கவில்லை. உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு என்னைவிட நிறைய திறமையான வீரர்கள் அணியில் உள்ளனர். சரியான திட்டமிடல் இருந்தால் மீண்டும் நாங்கள் உலகிலே சிறந்த அணியாக மாறமுடியும் என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

BJP MLA Nainar Nagendran
Trisha Insta Story
Minister Ponmudi
DMK General Secretary Durai Murugan ,
Minister Ponmudi - DMK MP Trichy Siva
Amit Shah - Tamilisai Soundararajan