பழனிசாமி அரசுக்கு சட்டமும் தெரியாது – துரைமுருகன்

Default Image
  • குடியுரிமை மசோதாவை எதிர்த்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • பாஜக அரசு சர்வாதிகார போக்கில் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

குடியுரிமை மசோதாவை எதிர்த்து திமுக இளைஞரணி சார்பில் சென்னை சைதாப்பேட்டையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவினர்கள் பங்கேற்றனர். பின்பு  போலீசார் உதயநிதி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்தனர்.

இந்த நிலையில் சென்னையில் திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,சிறுபான்மையினரை பாதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் அமைந்துள்ளது .சிறுபான்மை சமுதாயத்திற்கு எதிரானது மிருகபலத்தை கொண்டுள்ள பாஜக அரசு சர்வாதிகார போக்கில் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

தமிழர்கள் அந்நியர்களாகவே கருதப்படுவார்கள். தமிழர்கள் இந்த நாட்டிற்காக பாடுபடவில்லையா தீண்டத்தகாதவர்களாக ஏன் அமித்ஷா கருதுகிறார் .திமுக இளைஞர்களை அடக்கும் சக்தி இந்த அரசுக்கு கிடையாது. பாஜக அரசின் வீழ்ச்சிக்கு இந்த சட்டம்தான் அடிகோலும்.

வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை கற்பிப்பார்கள். மேலும் தமிழக முதலமைச்சருக்கு குடியுரிமை சட்டம் ஒன்றும் தெரியாது .அவர் தெரிந்தது ஒன்று தான் ஊழல் செய்வதுதான் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்