நாதுராமை போலீசார் மீண்டும் சென்னை அழைத்து வந்தனர்!

Default Image

பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்ட சென்னை கொளத்தூர் நகைக்கடை வழக்கில் தொடர்புடைய  நாதுராமை போலீசார் மீண்டும் சென்னை அழைத்து வந்தனர். கொள்ளையடித்த நகைகளை பெங்களூரில் விற்றதாக நாதுராம் கூறியதையடுத்து அவனை போலீசார் பெங்களூருக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

அங்கு ராம்லால் என்ற நபரிடம் 2 கிலோ தங்கத்தைக் கொடுத்ததாக நாதுராம் தெரிவித்தான். இதையடுத்து ராம்லாலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நாதுராம் தன்னிடம் ஒன்றரைக் கிலோ தங்கத்தை மட்டுமே கொடுத்தததாகவும், அதனை தான் பல்வேறு இடங்களில் விற்றதாகவும் ராம்லால் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ராம்லாலையும், நாதுராமையும் சென்னை அழைத்து வந்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்