சூடான் தீவிபத்து : இந்தியர்களை அழைத்து வர திருமாவளவன் கோரிக்கை

Default Image
  • சூடான் நாட்டில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
  • சூடான் தீவிபத்தில் காயமடைந்த இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு  கோரிக்கை வைத்துள்ளார் திருமாவளவன்.

கடந்த 3 ஆம் தேதி சூடான் நாட்டில் உள்ள ஒரு பீங்கான் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் அங்கு பணியாற்றிய 23 பேர் உயிரிழந்தனர் .இதில் 18 இந்தியர்கள் உயிரிழந்தனர்.இந்த 18 பேரில் 3 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.2 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவரும்,ஒருவர் புதுச்சேரியை சேர்ந்தவர் ஆவார்.மேலும் படுகாயமடைந்தவர்கள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் ,எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் சந்தித்தார்.மேலும் சூடான் தீவிபத்தில் காயமடைந்த இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு அவரிடம் கோரிக்கை வைத்தார் திருமாவளவன் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்