பேரணி நடத்திய டெல்லி கல்லூரி மாணவர்கள் மீது போலீஸ் தடியடி!

  • டெல்லி ஜே.என்.யு பல்கலைகழக மாணவர்கள் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 
  • இன்று நடைபெற்ற பேரணியில் போலீசார் லேசான தடியடி நடத்தி மாணவர்கள் பேரணியை கலைத்தனர். 

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், அந்த கல்லூரியில் விடுதி கட்டணம், கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் இன்று பல்கலைக்கழக மாணவர்கள் ராஷ்ட்ரபதி பவனை நோக்கி பேரணி நடத்த இருந்தனர். ஆனால், போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் மாணவர்கள் பேரணி நடத்தினர்.

மாணவர்கள் சரோஜனி சாலையை கடந்த போது, தடுத்து நிறுத்தப்பட்டனர். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதாக கூறி மாணவர்களை கலைந்து போக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. ஆனால், மாணவர்கள் கலைந்து போக மறுத்து பேரணியில் முன்னேற பார்த்தனர் அதனால் லேசான தடியடி நடத்தி மாணவர்கள் பேரணியை கலைத்தனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.