அடுத்த அதிரடியில் களம் இறங்கும் கமல் !இளைஞர்கள்தாம் என் தலைவர்கள்…..

நடிகர் கமல்ஹாசன்  வருகிற 21ஆம் தேதி முதல் தாம் நடத்த இருக்கும் கூட்டங்கள் ஒருவழிப்பாதையாக தாம் மட்டும் பேசுவதாக இருக்காது என்றும், பெரியார் பாணியில் கலந்துரையாடல்களாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதில் பங்கேற்க விரும்புவோர் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல வார இதழில் தாம் எழுதி வரும் தொடரில் இதனைத் தெரியப்படுத்தியுள்ள அவர், சிலருக்கு வேண்டப்பட்டவன், சிலருக்கு வேண்டப்படாதவன் என்ற தோற்றங்களை உருவாக்க சிலர் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.தாம் இந்து விரோதியல்ல என்றும் தெரியப்படுத்தியுள்ளார்.

தமது மகள் ஸ்ருதி உட்பட தமக்கு நெருக்கமான பலரும் பக்தியுடன் இருப்பதை தாம் தவறாகப் பார்க்கவில்லை என்று கூறிய கமல், அவர்களை வெறுக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அது அவரவர் ஏற்றுக் கொண்ட வழிமுறை என்றும் தாம் இந்து அல்லது முஸ்லீம் கிறித்துவ மதங்களின் விரோதியல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment