அமமுகவை பதிவு செய்ய தடை கோரிய வழக்கு-தேர்தல் ஆணையம், தினகரன் பதிலளிக்க உத்தரவு

தினகரன் கட்சியை பதிவு செய்ய தடை கோரி புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அமமுகவை பதிவு செய்வதற்கு தடை விதிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி புகழேந்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றபோது,  நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது நீதிபதி கேள்வி எழுப்பினார். அமமுகவில் இருந்து வெளியேறிய பின் அக்கட்சியை பற்றி கவலைப்படுவதேன்? என்றும் கேள்வி எழுப்பினார்.

கட்சி பதிவுக்காக புகழேந்தி அளித்த பிரமாண பத்திரத்தை நீக்கிவிட்டு பதிவு குறித்து பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.மேலும் அமமுக-வை பதிவு செய்ய தடை கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம், தினகரன் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததுள்ளது.மேலும் வழக்கின் விசாரணை டிசம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.