டெல்லி விமானப் படையின் குரூப் கேப்டன் அதிரடியாக கைது!ஐ.எஸ். தீவிரவாதியா ?

Default Image

வாட்ஸ் ஆப் மூலம் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு  விமானப்படையின் ரகசியங்களைப் படமெடுத்து அனுப்ப முயன்றதாக சந்தேகிக்கப்பட்ட விமானப்படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி விமானப்படைத் தளத்தில் பணியில் இருந்த குரூப் கேப்டனான அவரை விமானப்படையின் உளவுப்பிரிவினர் கண்காணித்ததில் அவர் சிக்கினார்.

தான் காதலிக்கும் பெண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அந்த அதிகாரி ரகசிய தகவல்களை அனுப்பி வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்தப் பெண், விமானப்படை அதிகாரியை மயக்கி ரகசியங்களைப் பெறுவதற்காக ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தால் அனுப்பி வைக்கப்பட்டவர் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்