திமுக எம்.பி.க்கள் பிரதமர் மோடியுடன் திடீர் சந்திப்பு ! காரணம் என்ன ?

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் டி ஆர் பாலு கனிமொழி உள்ளிட்ட திமுக எம்பிக்கள் சந்தித்தனர் தமிழகத்தின் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வழங்கிய மனுவை பிரதமரிடம் அளித்தனர்.

திமுக தலைவர் ஸ்டாலினின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, பிரதமரிடம் அளித்தனர் திமுக எம்.பி.க்கள்.அதில் உள்ள முக்கியமான கோரிக்கைகள், நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு வேண்டும்.மாநில உரிமையை நிலைநாட்டும் வகையில் அரசியலமைப்பில் மாற்றம் வேண்டும்.முல்லைப்பெரியாறு, மேகதாது, தென்பெண்ணை போன்ற நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில், தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டது.