மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழப்பு..! வீட்டு உரிமையாளர் மீது வழக்குப்பதிவு..!

வடகிழக்கு மழை பெய்து வருவதால் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை மற்றும் மழை பெய்து வருகிறது.இந்நிலையில் கோவை மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 4 நாள்களாக மழை நீடித்து வரும் நிலையில் மேட்டுப்பாளையத்தில் உள்ள நடூர் பகுதியில் உள்ள ஏடி காலனியில் உள்ள குடியிருப்பின் பக்கவாட்டு சுவர்  சாய்ந்ததால் இன்று அதிகாலை 3 மணி அளவில் நான்கு வீடுகள் இடிந்து விழுந்தன.

இந்த சம்பவத்தின் போது  வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 17 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் 17 பேர்  உடலை மீட்டனர். மேலும் இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழக்க காரணமானவர்களை   கைது செய்யக் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலை பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்த வீட்டின் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

author avatar
murugan