#Breaking : உள்ளாட்சித் தேர்தல் -5-ஆம் தேதி வழக்கு விசாரணை

Default Image

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கில் தேர்தல் அறிவிப்பை வெளியிடும் முன் தொகுதி மற்றும் வார்டு மறுவரையரை இட ஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட விதிகளை  முறைப்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டது.மேலும் திமுக சார்பில் இந்த மனுவை விரைவில் விசாரிக்க கோரியும் முறையீடு செய்யப்பட்டது.பின்னர் உச்சநீதிமன்றம் திமுகவின் மனுவை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் டிசம்பர் 5-ஆம் தேதி அவசர வழக்காக விசாரிக்க உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.திமுகவின் மனுவுடன் சேர்த்து புதிய மாவட்டங்களின் வாக்காளர்கள் தொடர்ந்த மனுவையும் விசாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்