குரங்குக்காக நாயை புலியாக மாற்றிய விவசாயி..!

கர்நாடக மாநிலம்  சிவமோகா மாவட்டத்தில் உள்ள நல்லூரு கிராமத்தை சார்ந்தவர் ஸ்ரீகந்த கவுடா.இவர் விவசாயம் செய்து வருகிறார்.இவரது விவசாய நிலையத்தில் குரங்குகள் புகுந்து நாசம் செய்து உள்ளது.என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த ஸ்ரீகந்த கவுடா உத்தரா கன்னடா மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயி  புலி பொம்மையை  நிலத்தில் வைத்து குரங்குகளை விரட்டியாக கேள்விப்பட்டு உள்ளார்.
இதை தொடர்ந்து ஸ்ரீகந்த கவுடா தனது நிலத்தில் புலி பொம்மையை  வைத்து உள்ளார். இரண்டு நாள்கள் கழித்து நிலத்தில் பார்த்தபோது புலி பொம்மையை பார்த்து குரங்குகள் நிலத்தில் வரவில்லை .இதை தொடர்ந்து வேறு ஒரு இடத்திலும் புலி பொம்மையை வைத்து உள்ளார் அங்கேயும் குரங்குகள் வரவில்லை.
புலி பொம்மை நீண்ட நாள்கள் நிலைத்து நிற்காது என எண்ணி ஸ்ரீகந்த தான் வளர்த்த நாயின் மேல புலியை போல வண்ணம் தீட்ட முடிவு செய்து உள்ளார். பின்னர் டை கலரை வாங்கி நாயின் மேல் வண்ணம் தீட்டியுள்ளார்.இந்த டை கலர் ஒருமாதம் இருக்கும் என ஸ்ரீகந்த கூறியுள்ளார்.தனது பயிரை காக்க ஒருவர் நாய்க்கு வண்ணம் பூசியது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.