நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இறந்துவிடுங்கள் – சீமான் எச்சரிக்கை ..!

Default Image

இலங்கையில் நடைபெற்ற ஈழப்போரின்போது இறந்த  விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும்  நவம்பர் 27-ம் தேதி மாவீரர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதை தொடர்ந்து நேற்று மதுரை ஒத்தக்கடை பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில்  கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தில் பிரபாகரனை பயங்கரவாதி என்றும் ரஜினியை தலைவர் என்று கூறும் நிலை தான் உள்ளது. அரசியலுக்கு வரட்டும், ஐ எம் வெயிட்டிங் என கூறினார்.
நாம் தமிழர் கட்சி மீது வழக்கு தொடர்ந்தவர்கள் , சிறையில் வைத்தவர்கள் தாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இறந்து விடுங்கள் என  சீமான் எச்சரித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்