நாளை மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பதவியேற்கிறார் உத்தவ் தாக்கரே

Default Image

உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார்.
கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த தேவேந்திர பத்னாவிசு பதவியேற்ற நிலையில் இதற்கு எதிராக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்தது.
இதனால் பாஜகவின் தேவேந்திர பத்னாவிசு பெரும்பாண்மை இல்லாத காரணத்தால் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.இடைக்கால சபாநாயகராக காளிதாஸ் கொலம்ப்கர் நேற்று நியமனம் செய்யப்பட்டார்.இதனை தொடர்ந்து இன்று இடைக்கால சபாநாயகர் முன்னிலையில்  எம்எல்ஏக்கள் பதவியேற்றனர்.
காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா ஆகிய 3 கட்சிகளும் தங்களது முதல்வர் வேட்பாளராக உத்தவ் தாக்கரே நிறுத்த முடிவு செய்துள்ளது.இதன்படி உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார். நாளை மாலை 6.40 மணியளவில், சிவாஜி பார்க்கில் வைத்து நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சராக பதவியேற்கிறார் உத்தவ் தாக்கரே.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
suseenthiran
BJP WIN
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen