ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிதம்பரம் இன்று டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்

Default Image

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்  சிதம்பரம் இன்று டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும்,காங்கிரசின் மூத்த தலைவருமான  சிதம்பரத்தை முதலில் சிபிஐ கைது செய்து விசாரித்தது.இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்தது.இதனிடையே  சிதம்பரம் தரப்பில் சிபிஐக்கு எதிரான வழக்கில் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தார்.அந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.ஆனாலும் சிதம்பரம் அமலாக்கத்துறை வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரது காவல் இன்றுவரை நீட்டிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து  திகார் சிறையில் உள்ள அவருக்கு இன்றுடன் காவல் முடிவடைய உள்ள  நிலையில் இன்று டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
மேலும் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு தாக்கல் செய்தார்.அந்த மீதான விசாரணை இன்று  உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்