திஹார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்தித்த சசிதரூர்..!

Default Image

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை  ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்து திஹார் சிறையில் நீதிமன்றக்காவலில் வைத்து உள்ளனர். நாளை மறுநாள் வரை ப.சிதம்பரத்தை  நீதிமன்றக்காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு  நீதிமன்றம் அனுமதி கொடுத்து உள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர் , ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் மற்றும் மனிஷ் திவாரி ஆகியோர் சந்தித்து பேசினர்.ப.சிதம்பரத்தை சந்தித்த பிறகு பேசிய சசிதரூர், 98 நாட்கள் சிறைவாசம் எதற்காக..? ரூ. 9.96 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டதற்காகவா…? இந்த வழக்கு சர்ச்சைக்குரிய பிரச்சினை அல்ல… இந்த செயல் மோசமான சமிக்ஞையை காட்டுகிறது என கூறினார்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்