தளபதி விஜய்யின் நெருங்கிய சொந்தகாரராக மாறப்போகும் அதர்வா முரளி!

Default Image

தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் நெருக்கமான உறவு வழி பெண் தான்  சினேகா பிரிட்டோ. அவர் சிங்கப்பூரில் எம்பிஏ படித்து வந்துள்ளார். அவர் தற்போது சொந்தமாக ஓட்டல் நிறுவனம் நடத்தி வருகிறார்.
அதேபோல நடிகர் அதர்வா முரளியின் தம்பி ஆகாஷ் முரளியும் சிங்கப்பூரில் எம்பிஏ படித்து வந்துள்ளார். இவரும் தற்போது ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ளார். ஆகாஷும், சினேகா பிரிட்டோவும் ஒரே வகுப்பு தோழர்கள். பின்னர் இருவரும் காதலர்களாக மாறி உள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும், வேறு சில காரணங்களாலும் திருமணம் தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. பின்னர் சிறிது காலம் அவர்கள் சம்மதத்திற்காக காத்திருந்து தற்போது இவர்கள் காதல், திருமணத்தில் கைகூட உள்ளது.
இவர்களது திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட உள்ளது. டிசம்பர் 6ஆம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு தளபதி விஜய் மற்றும் திரைபிரபலங்கள் என பலர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்