அதிகரித்த டிக் டாக் மோகம்! விலைமாதர்கள் என சித்தரிக்கப்பட்ட இரு மதுரை பெண்கள்!

Default Image

மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த திருமணமான இரு பெண்கள் டிக் டாக் செயலியை அதிகமாக உபயோகித்து வந்துள்ளனர். இதில் தாங்கள் நடித்த பல விடீயோக்களை பதிவேற்றி உள்ளனர். இவர்கள் டிக் டாக்கில் ஏராளமான பயனர்களை பின்தொடர்ந்து உள்ளனர்.
இவர்களுக்கு தேனியை சேர்ந்த சுகந்தி என்பவர் என்பவர் பழக்கமாகியிருந்தார். சுகந்தியும் பல விடீயோக்களை பதிவேற்றி வந்துள்ளார். அப்போது திடீரெனெ சுகந்திக்கும் அந்த இரு பெண்களுக்கும் பிரச்சனை வரவே, சுகந்தி அந்த பெண்களின் விடியோவை தனது ஆண் நண்பர்களுடன் இணைத்து அந்த பெண்களை விலைமாதர்கள் போல சித்தரித்து டிக் டாக்கில் சுகந்தி என்பவர் பதிவேற்றியுள்ளதாக தெரிகிறது.
இந்த வீடியோக்கள் வைரலாக பரவி வந்தன.இந்த வீடியோ விவகாரம் அந்த இரு பெண்களின் வீடுகளுக்கு தெரியவரவே அதிர்ந்த அந்த பெண்களில் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறி தனியார் பெண்கள் விடுதியில் தங்கியுள்ளார். இன்னொரு பெண் மதுரை காவல் நிலையத்தில் தேனியை சேர்ந்த சுகந்தி மற்றும் சுகந்தியின் ஆண் நண்பர்கள் குறித்தும் புகார் அளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்