இரண்டு தலை மற்றும் மூன்று கைகளுடன் பிறந்த அதிசய குழந்தை..!

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தை சார்ந்த பாபிதா. இவருக்கும் அஹிர்வார்  என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு நேற்று மாவட்ட மருத்துவமனையில் முதல் குழந்தை பிறந்தது.
இவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு இரண்டு தலைகள் , மூன்று கைகளுடன் பிறந்து உள்ளது.  இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் , இந்த குழந்தை இரண்டு தலைகள் மற்றும் மூன்று கைகள் உள்ளன.
ஒரு இதயம் மட்டுமே உள்ளது. தற்போது இந்த குழந்தை  மருத்துவர்கள் கண்காணிப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. குழந்தையின் தாயும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது போன்ற குழந்தைகள் பிறப்பது மிகவும் அரிது என கூறினர்.

author avatar
murugan