பிரதமர் மோடிக்கு நன்றி – துணை முதல்வர் அஜித் பவார் ட்வீட்

Default Image

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள அஜித் பவார்.
மகாராஷ்டிராவில் நீண்ட நாட்களாக அரசியலை குழப்பம் நிலவி வந்த நிலையில்  முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர் அஜித்பவார் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.
பதவியேற்ற இருவருக்கும்  பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில்,மகாராஷ்டிராவின் வளமான எதிர்காலத்திற்கு இருவரும் பாடுபடுவார்கள் என்று தெரிவித்தார்.
 


இந்த நிலையில் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள அஜித் பவார்  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,  பிரதமர் மோடிக்கு நன்றி. நாங்கள் நிலையான ஆட்சியை உறுதி செய்வோம். அத்துடன், மகாராஷ்டிரா மக்களுக்காக கடினமாக உழைப்போம் என்று   அஜித் பவார் ட்வீட் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்