கட்சியே தொடங்காமல் சிலர் பேசுகின்றனர்- முதலமைச்சர் பழனிசாமி

Default Image

கட்சியே தொடங்காமல் சிலர் பேசுகின்றனர்என்று முதலமைச்சர் பழனிசாமி  தெரிவித்துள்ளார்.
கமல் 60 விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,தமிழகத்தின் முதலமைச்சராக பழனிசாமி ஆகுவர் என்று கனவில் கூட நினைத்திருக்கமாட்டார் என்று தெரிவித்தார்.மேலும் அதிசயம் இன்று நடக்கும் ,நாளை நடக்கும் என்று தெரிவித்தார். இவர் கூறிய இந்த  கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக அதிமுகவினர் ரஜினியை விமர்சித்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,கட்சியே தொடங்காமல் சிலர் பேசுகின்றனர் என்றும் யார் கட்சி தொடங்கினாலும் எங்களுக்கு கவலை இல்லை என்று நடிகர் ரஜினி குறித்து தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்