பாஜகவை விமர்சிக்கும் ஒபிஎஸ்!பாஜகவின் நிலை குறித்து கருத்து…

பாஜக மற்றும் அதிமுக இடையே இணக்கமான சூழல் நிலவி வருவதாக எதிர்கட்சியினர் கூறிவரும் நிலையில் தற்போது அதற்கு மாறாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் கருத்து கூறியுள்ளார்.
தேசிய கட்சிகளை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள பள்ளி விழாவில் கலந்துக் கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம் எந்தக் காலத்திலும் தமிழகத்தில் எந்த நிலையிலும் தேசிய கட்சிகள் காலூன்ற இடமில்லை என்று தெரிவித்தார். மக்கள் தீர்ப்பும் அதுதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment