மத்திய அரசை கண்டித்து முதல்வர் மாட்டுவண்டியில் சென்று ஆர்பாட்டம்

Default Image

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் சிறு சிறு பைசாவாக ஏறிகொண்டே வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறும் அபாயம் உருவாகி வருகிறது. இதனை கண்டித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று மாட்டுவண்டியில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தி வருகிறார்.
புதுச்சேரியில் இளைஞர் காங்கிரஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாட்டுவண்டியில் சென்று போராடினர். தலைமை தபால் நிலையம் அருகே அவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாவு உயர்வை கண்டித்து கோசங்கள் எழுப்பப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்