தமிழக தலைமை தகவல் ஆணையராக பதவியேற்றார் ராஜகோபால்

Default Image

தமிழக தலைமை தகவல் ஆணையராக பதவியேற்றார் ராஜகோபால் ஐஏஎஸ்.
ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தின் செயலாளராக இருந்த ராஜகோபால் தமிழக தகவல் ஆணையராக நியமனம் செய்து தமிழக உத்தரவு பிறப்பித்தது. ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தின் செயலாளராக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலான் இயக்குனராக இருந்த ஆனந்த் ராவ் விஸ்ணு பாட்டீல் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இன்று தமிழக தலைமை தகவல் ஆணையராக பதவியேற்றார் ராஜகோபால் ஐஏஎஸ் .ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.ராஜகோபால் தமிழக தகவல் ஆணையராக 3 ஆண்டுகள் பணிபுரிவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்