வெற்றி பெற்றதை எதிர்த்த வழக்கு ! கனிமொழி தொடர்ந்த மனு தள்ளுபடி

Default Image

திமுக எம்பி கனிமொழி தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம்  தள்ளுபடி செய்துள்ளது.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட கனிமொழி வெற்றிபெற்றார். கடந்த சில தினங்களுக்கு முன் கனிமொழி வெற்றிக்கு எதிராக சந்தானகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.இதற்கு பின் இந்த வழக்கை நிராகரிக்கோரி  திமுகவின் கனிமொழி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.இந்த நிலையில் இந்த வழக்கில் கனிமொழி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.அதன்படி இன்று நடைபெற்ற விசாரணையில் கனிமொழி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாக உயர்நீதிமன்றம் அறிவித்தது.மேலும்  சந்தானகுமார் மனுவை ஏற்பதாகவும்  சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்