எந்த மாநிலத்தில் பிரச்னை நடந்தாலும் குரல் கொடுப்பது திமுக தான் – உதயநிதி ஸ்டாலின்

எந்த மாநிலத்தில் பிரச்னை நடந்தாலும் குரல் கொடுப்பது திமுக தான் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சியில்  திமுக பொதுக்குழு தீர்மானம் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில்,திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,இந்தியாவில் எந்த மாநிலத்தில் பிரச்சனை ஏற்பட்டாலும் அதற்காக குரல் கொடுப்பது தி.மு.க தான். இந்தி திணிப்பை மீண்டும் கொண்டு வந்தால் அதை எதிர்த்து திமுக போராட்டம் நடத்தும் என்று  பேசினார்.