ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்- ரவிசங்கர் பிரசாத்

Default Image

ரபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்  தெரிவித்துள்ளார். 
ரபேல் விவகாரத்தில் நீதிமன்றமே காவலாளியே திருடன் என்று கூறியதாக கூறி பிரதமர் மோடியை  விமர்சித்தார் ராகுல் காந்தி.இதனால் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கில் இருந்து அவரை விடுவித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில்,  ரபேல் தீர்ப்பு உண்மைக்கும், நேர்மையாக முடிவெடுக்கும் மோடி அரசுக்கும் கிடைத்த மற்றுமொரு வெற்றி .ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்