முதல் டெஸ்ட் : பந்து வீச்சில் கலக்கிய இந்திய வீரர்கள்..! 150 ரன்னில் பங்களாதேஷ் ஆல் அவுட் ..!

Default Image

இந்தியாவில் சுற்று பயணம் செய்து பங்களாதேஷ் அணி டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.இன்று முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர்  மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர்களாக ஷாட்மேன் , இம்ருல் கயஸ் இருவரும் களமிறங்கினர்.
Image
ஆட்டம் தொடக்கத்திலே இருவரும் 6 ரன்னுடன் வெளியேறினர். பின்னர் இறங்கிய முகமது மிதுன் நிலைத்து நிற்காமல் 13 ரன்களுடன் வெளியேறினர். இதனால் பங்களாதேஷ் அணி 31 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது.இதை தொடர்ந்து கேப்டன் மோமினுல் ஹக் , முஷ்பிகுர் ரஹீம் இருவரும் இனைந்து அணியின் எண்ணிக்கையை உயரத்தினர்.
நிதானமாக விளையாடி வந்த முஷ்பிகுர் ரஹீம் அரைசதம் அடிக்காமல் 43 ரன்களுடனும் , கேப்டன் மோமினுல் ஹக் 37 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.பின்னர் இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற பங்களாதேஷ் அணி 58.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்தது.
Image
இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், அஸ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டையும் , முகமது ஷமி  3 விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மாயங்க் அகர்வால் ,ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்