BREAKING :ரஃபேல் வழக்கு :சீராய்வு மனு தள்ளுபடி..!

Default Image

இந்திய விமானத்துறைக்கு மத்திய அரசு 36 ரஃபேல் விமானங்களை வாங்கியதில் முறைகேடு இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.மேலும் காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ரபேல் போர் விமானம் வாங்கப்பட்ட தொகை, ஒப்பந்தம் ஆகிய அனைத்தும் சரியான முறையில் தான் இருக்கிறது .இதை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி ரஃபேல் விமானங்களை வாங்கியதில் முறைகேடு இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் ரஃபேல் விமானங்களை வாங்கியதில் முறைகேடு இல்லை என கூறிய தீர்ப்பை சீராய்வு செய்ய கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.இந்த சீராய்வு செய்யப்பட்ட  மனுகள் மீது ரஞ்சன் கோகாய் அமர்வு தீர்ப்பு வழங்கப்பட இருந்தது.
ரஃபேல் விமானங்களை வாங்கியதில் முறைகேடு இல்லை என கூறிய தீர்ப்பிற்கு எதிராகதாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்