கோவையில் இருந்து சென்ற கொங்கு எக்ஸ்பிரஸ் மீது மின்சார ரயில் நேருக்கு நேர் மோதல்..! 30  பயணிகள் காயம் ..!

Default Image

கோவையில் இருந்து டெல்லி நிஸாமுதீன் செல்லும் கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஹைதராபாத்தில் உள்ள கச்சிகுடா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது.இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் அதே தண்டவாளத்தில் வந்த புறநகர் மின்சார ரயில் கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில் மீது நேருக்கு நேர் மோதியது.

கொங்கு எக்ஸ்பிரஸ்  ரயில் நிலையத்தின் உள்ளே நின்றதால் ரயில் குறைந்த வேகத்தில் இயங்கியுள்ளன. இதனால், பெரிய அளவில் நடக்க இருந்த விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் 30  பயணிகள் காயமடைந்துள்ளதாகவும் , சிக்னல் கோளாறு காரணமாக  இந்த விபத்து நடந்து இருக்கலாம் என முதற்கட்ட தகவலில் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்