பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பிப்ரவரி 1 முதல் சிபிஐ (எம்) தொடர் மறியல்

Default Image

அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கும் அநியாய பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்களும், அனைத்துப் பகுதி பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் போராடி வருகின்றனர். குறிப்பாக லட்சக்கணக்கான மாணவர்கள் கட்டண உயர்வை ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராடுவது என்ற உறுதியோடு வீதியில் இறங்கி வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நியாயமானக் குரலை ஏற்று கட்டண உயர்வை ரத்து செய்வதற்கு பதிலாக, அடக்குமுறையை எடப்பாடி அரசாங்கம் ஏவி வருகிறது. ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர், சிறைக்கொட்டடியில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் மாணவர் – வாலிபர் தலைமை மீது குறிவைத்து வேட்டையாடும் வகையில் கடுமையான கிரிமினல் வழக்குகளை புனைந்து சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்துவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. தமிழக அரசின் இத்தகைய ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

இந்த அநியாய பேருந்து கட்டண உயர்வை உடன் ரத்து செய்ய வேண்டும், போராடுகிற மாணவர்கள் – இளைஞர்கள் – மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெறுவதோடு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2018 பிப்ரவரி 1 முதல் மாவட்ட / வட்ட தலைநகரங்களில் தொடர் மறியல் போராட்டத்தை நடத்திடும்.
இந்த மறியல் போராட்டத்தில் அனைத்து பகுதி மக்களும் பங்கேற்று போராட்டத்தை வெற்றிகரமாக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
– ஜி. ராமகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்
27.01.2018

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்