சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது – டெல்லி உயர்நீதிமன்றம்

Default Image

சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்   அமலாக்கத்துறை முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை  கைது செய்துள்ளது.தற்போது சிதம்பரம் திகார் சிறையில் உள்ளார்.இதனிடையில் உடல்நிலையில் திடீர் பின்னடைவு காரணமாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக இடைக்கால ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் .உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்குமாறு ப.சிதம்பரம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இன்று இந்த மனு மீதான வழக்கு மீதான விசாரணை நடைபெற்றது. ப.சிதம்பரத்தின் உடல்நிலை நன்றாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவ குழு டெல்லி உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.உடல்நிலையை காரணம் காட்டி தொடரப்பட்ட இடைக்கால ஜாமின் மனு நிராகரித்தது டெல்லி உயர்நீதிமன்றம். 
திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு கொசுவலை கொடுக்கவும், வாரம் ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்யவும், மாஸ்க் வழங்கவும் உத்தரவு பிறப்பித்தது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்