ஜம்மு – காஷ்மீர் இன்று முதல் புது மாற்றத்தை சந்திக்கிறது – இனி அது கிடையாது

Default Image

இன்று  காஷ்மீர் மற்றும் லடாக்  அதிகாரப்பூர்வமாக இரண்டு யூனியன் பிரதேசங்களாகியுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.மேலும் காஷ்மீர்  மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது .பின்னர் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.இதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்தார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்த நிலையில்,காஷ்மீர் மறுவரையரை சட்டம் அக்டோபர் 31 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்தது .அக்டோபர் 31 -ஆம் தேதி முதல் ஜம்மு-காஷ்மீர் தனி யூனியனாகவும், லடாக் தனி யூனியனாகவும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று ஜம்மு காஷ்மீருக்கு கிரிஷ் சந்திரா மர்மு, லடாக்கிற்கு ஆர்.கே. மாத்தூர் ஆகியோர் துணை நிலை ஆளுநர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல் இன்று இவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.இதனையடுத்து இந்த இரண்டு யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
மேலும் காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக உதயமாகிவுள்ள நிலையில் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 28 -ஆக குறைந்துள்ளது.யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 7 -லிருந்து 9 -ஆக உயர்ந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்