மீண்டும் ஒரு சோகம்! சுஜித் செய்தியை பார்த்துக் கொண்டிருந்த போது 2 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு!

தூத்துக்குடி மாவட்டம், திரேஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன்- நிஷா தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இவர்களுக்கு 2 வயதில் ரேவதி சஞ்சனா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், லிங்கேஸ்வரன் தனது வீட்டில் தொலைக்காட்சியில், சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்ததை, மீட்டு எடுக்கும் செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது தனது குழந்தை காணாமல் போனதை அறிந்த அவர், அக்கம்பக்கம் தேடி உள்ளனர்.
அதன் பின் அவர்கள் வீட்டில் உள்ள கழிப்பறையில் சென்று பார்த்த போது, அங்குள்ள தண்ணீர் கேனுக்குள் குழந்தை ரேவதி சஞ்சனா தலைக்குப்புற கவிழ்ந்து மூச்சு திணறி இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து, குழந்தையை உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.