தொடரும் இழுபறி !ஆட்சியமைப்பது யார்?

Default Image

மஹாராஷ்டிராவில் பாஜக மற்றும் சிவசேனா இடையே ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது. அம்மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளில்  பாஜக – சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் பாஜ 152 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் போட்டியிட்டது.
தேர்தல் முடிவில் பாஜக  105 தொகுதிகளிலும்,சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது.  சிவசேனா தரப்பில்  50-50 பங்கீடு என்ற உடன்படிக்கையின்படி இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சராக்க பாஜகவிடம் தெரிவித்துள்ளது.மேலும் பிரதமர் மோடியும் தேவேந்திர பத்னாவிஸ்தான் மீண்டும் முதலமைச்சர் என்று தெரிவித்தார்.பாஜக மற்றும் சிவசேனா தலைவர்கள் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோர உள்ளனர். இதனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றாலும் தனியாக ஆட்சியை அமைக்க முடியாத சூழல் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்