குழந்தையின் மீட்பு பணி நடைபெறும் இடத்தில பிராத்தனையில் ஈடுபட்ட பிரபல நடிகர்!

Default Image

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையை அடுத்த  நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த  2 வயது சிறுவன் சுஜித்  ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். கடந்த 25-ம் தேதி மாலை  5.40 மணிக்கு விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து, 4-வது நாளாக, குழந்தையை மீட்கும்பணி 61 மணி நேரத்தை தாண்டி நடைபெற்று வருகிறது. குழந்தை ஆரோக்கியத்துடன் மீண்டும் திரும்பி வர வேண்டும் என்று அணைத்து மதத்தினரும் பிரார்த்தனை செய்து வருகின்ற நிலையில், நடிகர் தாமு குழந்தையின் மீட்பு பணி நடைபெறும் இடத்திற்கு இன்று காலை சென்றார். அதன் அருகே ஒரு இடத்தில அமர்ந்த தாமு, குழந்தைக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்