70 அடி ஆழத்தில் சிக்கிய 2 வயது சிறுவன் ! 17 மணி நேரமாக தொடரும் மீட்பு பணி

Default Image

திருச்சியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 17 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
திருச்சியில் உள்ள மணப்பாறையை அடுத்த  நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த  2 வயது சிறுவன் சுஜித்  ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான்.நேற்று மாலை விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆனால் ஆழ்துளை கிணற்றில் 70 அடிக்கும் கீழே சென்றுவிட்ட நிலையில் மீட்புப்பணிகள் 17 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.சிறுவனை மீட்கும் பணியில், தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்